உதவி நண்பர்களுக்கு வணக்கம்
கடந்த நான்கு நாட்களாக மட்டக்களப்பின் கட்டுப்பாடற்ற பிரதேசத்தை நோக்கிய இராணுவ நகர்வினால் அப்பகுதியிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்த வண்ணமிருக்கின்றனர்.
இதேவேளை அப்பகுதிக்கான தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இல்லப்பிள்ளைகள் பற்றி அறிவதும் மிகக் கஷ்டமாகவேயுள்ளது.
விபுலாநந்தா இல்லத்தை சேர்ந்தவர்களே இன்று எம்முடன் தொடர்பு கொண்டனர்.
நிலைமை அங்கு மோசமாக இருந்ததால் பிள்ளைகளுடன் தாங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்துள்ளதாகவும், தற்போது சந்திவெளியிலுள்ள மாணிக்கவாசகர் இல்லத்திலும், குருக்கள்மடத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றிலும் குறிப்பிட்ட சிலரை தங்கவிட்டுள்ளதாகவும், ஏனைய பிள்ளைகளை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்ததாகவும் சொன்னார்கள்.
சக்தி மகளீர் இல்லத்தினதும், கதிரொளி இல்லத்தினதும் தொடர்புகள் எதுவும் இல்லாததால் அவர்கள் பற்றிய சரியான தகவல்கள் எதனையும் சொல்லமுடியவில்லை. இப்பகுதியிலிருந்து வந்தவர்களின் தகவல்களின்படி அவர்களும் பாதுகாப்பாக இடம்பெயர்ந்துள்ளனர் என்பதனை அறியக்கூடியதாக இருக்கின்றது.
தொடர்ந்தும் இவ்வாறான நிலைமைகள் இருக்கப்போகின்றது.
நிலைமைகள் இப்படியே இருக்குமானால், இப் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
முதலில் சிதறிப்போன அவர்களை ஒன்றிணைப்பதற்கான வேலையை நாம் முன்னெடுக்கவேண்டும்.
அவர்களுக்கான இருப்பிடமொன்றையும் தேடிக்கொடுக்கவேண்டும். ஏககாலத்தில் எல்லோரையும் ஒரே இடத்திற்கு கொண்டுவருவதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவேண்டும்.
இது ஒரு நீண்டகால நோக்கத்தை அடிப்படையாக கொண்ட திட்டமாக இருந்தாலும் இன்றைய சூழ்நிலையை அடிப்படையாக வைத்தேனும் சிந்திக்கவேண்டியுள்ளது.
- யசிகரன் (இலங்கை) 3/2007
Trackback(0)
 |