பிள்ளைகளுடன் ஒருநாள் - 2009 அச்சிடுக மின்னஞ்சல்
one day with children-2009விபுலானந்தா சிறுவர் இல்லம்   -  திருப்பழுகாமம்
கதிரொளி சிறுவர் இல்லம்  -   கொக்கட்டிச்சேலை
சக்தி சிறுவர் இல்லம்  -   அரசடித்தீவு
மாணிக்கவாசகர் சிறுவர் இல்லம் -   சந்திவெளி

தங்கள் அமைப்பின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் மட்டக்களப்பு, இலங்கையிலுள்ள மேற்குறிப்பிட்ட இல்லங்களுக்குச் சென்று அவ்வில்லங்களை அவதானித்ததன் மூலமும் அவ்வில்லங்களிலுள்ள சிறுவர் சிறுமியர்களுடன் உரையாடியதன் மூலமும் கண்டுகொள்ள முடிந்தவற்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமுகமாக சிறு அறிக்கையாக வரைகிறேன்.

நோக்கம் :

குறிப்பிட்ட இல்லங்களில் வாழும் பிள்ளைகளின் நிலைமைகளைத் தெரிந்து கொள்ளல்.

செயற்பாடு :

25.04.2009 – விபுலானந்தா
02.05.2009 – கதிரொளி
02.05.2009 – சக்தி
05.05.2009 – மாணிக்கவாசகர்

குறிப்பிட்ட திகதிகளில் இவ்வில்லங்களுக்குச் சென்று அங்குள்ள சிறுவர் சிறுமிகளுடனும் அவர்களைப் பராமரிக்கும் நபர்களுடனும் உரையாடியதுடன் அவர்கள் வாழும் சூழலையும் அவதானித்தமை, இவ்வுரையாடல், அவதானத்தின் போது

1.    பரஸ்பர அறிமுகம்
2.    விளையாட்டு
3.    அவர்களுடன் சேர்ந்து உணவருந்துதல்
4.    குழுவாக்கலும் அதுனூடு அவர்களின் தேவைகளை அறிதலும்
5.    'அவர்களுக்கான நேரம்' – கொடுத்தல்

என்பன போன்ற செயற்பாடுகள் இடம் பெற்றன.

விளைவு :

மேற்கூறிய செயற்பாடுகளின் மூலமாக என்னால் பின்வருவனவற்றை அறிந்து கொள்ள முடிந்தது.

விபுலானந்தா  -  58
கதிரொளி  -  32
சக்தி  -  35
மாணிக்கவாசகர்  -  35

இருக்கின்ற போதிலும் நான்கு இல்லங்களிலுமே பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லல் (குறிப்பாக சாதாரணதரம், உயர்தரம்) விளையாட்டுப் போட்டிகளுக்காக தம்மைத் தயார் படுத்தல் என்ற காரணங்களால் அனைத்து சிறுவர்களையும் சிறுமியர்களையும் சந்திக்க முடியவி;ல்லை. இருப்பினும் அதிகளவானோர் சிறுவகுப்புக்கு உரியவர்களாக இருந்ததனால் அவர்களை சந்திக்கவும உரையாடவும் முடிந்ததது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( Thursday, 23 December 2010 15:02 )
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

பக்கம் 1 - 15

பேசும் படம்

1809.jpg

பேசும் படம்...

0409.jpg