பயில்வோம் அச்சிடுக மின்னஞ்சல்
தேனிருக்கும் மலரினை
தேடி மொய்க்கும் வண்டு போல்

சீனியுள்ள இடத்தினை
நாடி ஊரும் எறும்பு போல்

பழம் நிறைந்த சோலையைpayilvom
பார்த்துச் செல்லும் கிளி போல்

வளம் நிறைந்த நாட்டிற்கு
வந்து சேரும் மக்கள் போல்

பள்ளமான இடத்திற்கு
விரைந்து பாயும் வெள்ளம் போல்

நல்ல நல்ல நூல்கள்

நாடி நாமும் பயில்வோம்.

- எழில்
(விபுலானந்தா சிறுவர் இல்லம்)
10/2004
Trackback(0)
Comments (0)Add comments

Write comment

busy
 

பேசும் படம்

2209.jpg

பேசும் படம்...

1609.jpg