சமாதானம் அச்சிடுக மின்னஞ்சல்
சமாதானம் வருமென்று
காத்திருந்த காலம் அன்று
போர்முனையில் நான் நின்று
பொறி கலங்கும் நேரமின்று


வெள்ளைப் புறா ஒன்று
விண்ணேறிப் பறக்கையிலே
தொல்லை இல்லை இனிsamaathaanam
தோன்றியது சமாதானம்
என்று மனம் குளிர


எங்கிருந்தோ அம்பு ஒன்று
விரைந்த புறா மேலே
விருக்கென்று பாய்ந்ததிங்கே.


இரக்கமற்ற வேடன் அங்கே
தன்னலம் தான் கருதி
ஏய்துவிட்டான் அம்பு தனை.


குஞ்சுப் புறா அது
குருதி வெள்ளத்தில்
பஞ்சுப்பதுமை போல
மிதப்பதன் கொடுமை என்ன?


சமாதானப் புறா அங்கே
சாவதனைத் தேடியது.
தவிக்கின்ற மனித குலம்
சமாதானம் தேடுதிங்கே.


தேடியலைந்தாலும்
கிடைக்கவில்லை சமாதானம்.
கானலாய் தோன்றி அது
மறைந்ததெங்கே நாம் காணோம்.


வீட்டில் இல்லை சமாதானம்.
வெளியில் இல்லை சமாதானம்.
நாட்டினிலுமில்லை சமாதானமென்றால்
இனி எங்கு நாம் போவோம்.


- நதியா
(சக்தி இல்லம்)
10/2005
Trackback(0)
Comments (0)Add Comment

Write comment

busy
 

பேசும் படம்

1609.jpg

பேசும் படம்...

3309.jpg