"என்ர அப்பா என்னை கண்ணே குஞ்சு செல்லம் எண்டெல்லாம் கூப்பிடுவார்" என்னை அவர் நிறைய அன்புகாட்டி வளர்த்தார்.
"அவர் ஒரு விவசாயி. ஒருநாள் காலம வயலுக்குப் போகேக்க ஆமி பிடிச்சு அவர கொண்டிட்டுது... அம்மா என்னை 15 வயசு மட்டும் வளத்தா. அதுக்குப் பிறகும் தட்டத்தனிய என்னை வளர்க்கிறதுக்கான அம்மாட கஸ்ரங்கள என்னால தாங்க முடியேல்ல. அப்ப நான் அவட்ட சொன்னன், என்ன ஒரு சிறுவர் இல்லத்தில கொண்டே விடச் சொல்லி"
"இங்க வந்த பிறகுதான், எனக்கு விளங்கிச்சு. என்னை மாதிரி தாங்கள் நேசிக்கிற ஆக்கள இழந்த கன பேர் இருக்கினம் எண்டிறது. இப்ப நான் என்ர பெற்றோரிட நல்லாசிகளையும் இந்த இல்லத்துக்கு உதவிற ஆக்களிட ஆதரவையும் தான் என்ர எதிர்காலத்துக்காய் நம்பி இருக்கிறன்"
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிற "உதவி" இதுபோன்ற வேதனை மிகுந்த சில குரல்களுக்கு செவிசாய்த்து, அதற்கு, தன்னால் இயன்றவரையான உதவிகளை வழங்க முயலுகிறது. மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலுள்ள மிக மோசமான நிலையிலுள்ள ஐந்து சிறுவர் இல்லங்களுக்கே அவ்வாறான உதவிகளை வழங்குகிறது. அவ் இல்லங்களாவன: திருப்பலுங்காமத்திலுள்ள விபுலானந்தா சிறுவர் இல்லம், மொறக்கட்டாஞ்சேனையிலுள்ள மாணிக்கவாசகர் சிறுவர் இல்லம், சிற்றண்டியிலுள்ள யோகஸ்வாமி மற்றும் கொக்கட்டிச்சோலையிலுள்ள கதிரொளி மற்றும் சக்தி சிறுவர் இல்லங்கள்.
ஆண்களும் பெண்களுமாயுள்ள ஏறத்தாழ (5 வயது முதல் 20 வயதுவரையான) 150 சிறுவர்களும் யுத்தத்தில் தாய்தந்தையை இழந்தவர்களாகவோ, பெற்றோர்களில் ஒருவரையே உடையவர்களாகவோ அல்லது வறுமை, நோய், போன்ற காரணங்களால் அவர்களை வளர்க்க இயலாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவோ உள்ளார்கள். பொதுவாக இவர்களில் அனைவருமே போரிலிருந்து உயிர்தப்பிய பிள்ளைகள் ஆவர்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
விடியற்காலையில் யன்னலைத் திறந்தபோது இரத்த வெள்ளம் வழிந்தோடியது. நான் பார்க்க விரும்பியதோ அதிகாலை சூரியனைத்தான்.
கதவைத் திறந்தால் வெளியே இறந்த உடல்கள்தான்.
நான் காண விரும்பியதோ அழகான பூக்களைத்தான்.
என்ன நடக்கிறது? அடுத்தவரிடம் கேட்டேன்.
யுத்தம். பதில் வந்தது.
வெளியே போக முடியவில்லை.
- விஜிகலா
(வகுப்பு 9, யோகசுவாமி மகளிர் இல்லம்)
10/2004 |
|
|