|
பிள்ளைகளுடன் ஒருநாள் - 2009 |
|
|
|
விபுலானந்தா சிறுவர் இல்லம் - திருப்பழுகாமம் கதிரொளி சிறுவர் இல்லம் - கொக்கட்டிச்சேலை சக்தி சிறுவர் இல்லம் - அரசடித்தீவு மாணிக்கவாசகர் சிறுவர் இல்லம் - சந்திவெளி
தங்கள் அமைப்பின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் மட்டக்களப்பு, இலங்கையிலுள்ள மேற்குறிப்பிட்ட இல்லங்களுக்குச் சென்று அவ்வில்லங்களை அவதானித்ததன் மூலமும் அவ்வில்லங்களிலுள்ள சிறுவர் சிறுமியர்களுடன் உரையாடியதன் மூலமும் கண்டுகொள்ள முடிந்தவற்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமுகமாக சிறு அறிக்கையாக வரைகிறேன்.
நோக்கம் :
குறிப்பிட்ட இல்லங்களில் வாழும் பிள்ளைகளின் நிலைமைகளைத் தெரிந்து கொள்ளல்.
செயற்பாடு :
25.04.2009 – விபுலானந்தா 02.05.2009 – கதிரொளி 02.05.2009 – சக்தி 05.05.2009 – மாணிக்கவாசகர்
குறிப்பிட்ட திகதிகளில் இவ்வில்லங்களுக்குச் சென்று அங்குள்ள சிறுவர் சிறுமிகளுடனும் அவர்களைப் பராமரிக்கும் நபர்களுடனும் உரையாடியதுடன் அவர்கள் வாழும் சூழலையும் அவதானித்தமை, இவ்வுரையாடல், அவதானத்தின் போது
1. பரஸ்பர அறிமுகம் 2. விளையாட்டு 3. அவர்களுடன் சேர்ந்து உணவருந்துதல் 4. குழுவாக்கலும் அதுனூடு அவர்களின் தேவைகளை அறிதலும் 5. 'அவர்களுக்கான நேரம்' – கொடுத்தல்
என்பன போன்ற செயற்பாடுகள் இடம் பெற்றன.
விளைவு :
மேற்கூறிய செயற்பாடுகளின் மூலமாக என்னால் பின்வருவனவற்றை அறிந்து கொள்ள முடிந்தது.
விபுலானந்தா - 58 கதிரொளி - 32 சக்தி - 35 மாணிக்கவாசகர் - 35
இருக்கின்ற போதிலும் நான்கு இல்லங்களிலுமே பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லல் (குறிப்பாக சாதாரணதரம், உயர்தரம்) விளையாட்டுப் போட்டிகளுக்காக தம்மைத் தயார் படுத்தல் என்ற காரணங்களால் அனைத்து சிறுவர்களையும் சிறுமியர்களையும் சந்திக்க முடியவி;ல்லை. இருப்பினும் அதிகளவானோர் சிறுவகுப்புக்கு உரியவர்களாக இருந்ததனால் அவர்களை சந்திக்கவும உரையாடவும் முடிந்ததது.
நான்கு இல்லங்களுமே தமக்கான சொந்தக்கட்டடிடங்களில் இயங்கிவருவது குறிப்பிடத் தக்கதாகும். சில போதாமைகள் இருக்கின்ற போதிலும் அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். நான்கு இல்லங்களிலுமே சொல்லி வைத்தாற் போன்ற வணக்கங்கள் வரவேற்கின்றன. அங்குள்ளவர்களுக்கு எனது வருகை தெரியப்படுத்தப் படாத போதிலும் புதியவர்கள் தம் சூழலுக்குள் வருகை தந்தால் வணக்கங்களால் வரவேற்க வேண்டுமென்ற வழிமுறை அவ்வில்லங்களில் பின்பற்றப் படுவதனால் வந்தனங்கள் வரவேற்பின் அடையாளமாயின. சிலரிடம் இயல்போடும் பலரிடம் இயல்பற்று இயந்திரத்தனமாயும் வெளிப்பட்ட வரவேற்புக்களை ஏற்றவண்ணம் நானும் உள்நுழைந்தேன்.
வெற்று வெளிகள் கட்டிடங்களாகி பின்னர் வாழும் சூழலை வழப்படுத்தும் முயற்சியாக சுற்றுச்சூழலை பசுமையாக்கும் முயற்சிகளை சக்தி தவிர்ந்த மற்றய இல்லங்களில்அவதானிக்க முடிந்தது. இம்முயற்சியில் மாணிக்கவாசகர் இல்லம் அண்மையிலேயே இறங்கியுள்ளதனால் (ஒரு வருடமாக சொந்தக் கட்டிடத்தில் வாழ்கின்றனர்) சுற்றிவர சூனியமாக இருக்கும் சூழலில் பிள்ளைகளின் பாடு பெரும் திண்டாட்டமாகவே உள்ளது. மற்றய இல்லங்கள் போன்றன்று மாணிக்கவாசகர் மக்கள் புழக்கமற்ற வெளியில் தான் மட்டுமாய் தனித்திருக்கின்றது. இதனால் மக்களின் தொடர்பு மட்டுமன்றி மரங்களின் தாலாட்டும் இப்பிள்ளைகளுக்கு எட்டுவது கடினமாகவே உள்ளது. வாயிற் கதவுக்கும் வாழுமிடத்துக்கும் இடையிலான பெருவெளி அவர்களை பெரிதும் பாதிக்கின்றது. வீட்டை அடைத்தால் வரும் இயல்பான சுவாசமற்ற எரிச்சலே மேலோங்குகிறது. வெளியின் தூரம் மட்டுமன்றி வெய்யிலின் புழுக்கமும் இதனை அதிகப்படுத்துகின்றது. காற்றாடிகளற்ற கட்டிடங்களில் காற்றினை எதிர்பார்க்கும் அவர்கள் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகின்றன. இதனால் இச்சூழலை பசுமையாக்கும் முயற்சி தீவிரமடைகின்றது. ஆனாலும் இது நிறைவேற நீண்ட நாட்கள் தேவை என்பது அவர்களுக்கும் தெரியும்.
|
|
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( Friday, 05 February 2010 23:52 )
|
|
மேலும் வாசிக்க...
|